டார்ச்சர் தாங்க முடியலீங்க... இரவில் காவல் நிலையம் ஓடிவந்த நடிகை!

உ.சசிக்குமார்,
அய்யா புருஷன் டார்ச்சர் தாங்க முடியவில்லை, ஆபாசமாக..... மெஸேஜ் பண்றார் என்று புகார் அளிக்க இரவில் காவல் நிலையத்துக்கு நடிகை ரட்சிதா ஓடிவந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் தான் ரட்சிதா மற்றும் தினேஷ் இணைந்து நடித்தனர். ரீல் ஜோடியாக நடித்த இவர்களுக்குள் காதல் மலர ரியல் ஜோடிகளாக மாற ஆசைப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. அதன் பின்னரும், ரட்சிதா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார்.
சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்துரசிகர்களை கவர்ந்த ரட்சிதா ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
இந்நிலையில் தற்போது ரட்சிதா தன் கணவர் தினேஷின் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் சில கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இதையடுத்து ரட்சிதா சென்னையில் ஒரு அப்பார்ட்மென்டில் வசித்து வரும் நிலையில் அவருக்கு சமீபகாலமாக தினேஷ் மெசேஜ் செய்து தொல்லை கொடுப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ரட்சிதா போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தினேஷ் ஆபாசமாக திட்டி மெசேஜ் செய்து வருவதாகவும், தன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதாகவும், தினேஷால் தான் நிம்மதி இழந்து தவிப்பதாகவும் மாங்காடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார் ரட்சிதா.
இதையயடுத்து போலீசார் தினேஷை அழைத்து விசாரிக்கையில், ரட்சிதா ஏதோ உள்நோக்கத்துடன் இதை செய்கின்றார். அவருக்கு வேண்டுமானால் என்னிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொள்ளட்டும், நான் இனி அவரை தொல்லை செய்யமாட்டேன் என கூறியுள்ளார்.