நிஜமான சூப்பர் ஸ்டார்...ஜிம் பிரியர்... நடிகர்... புனித் திடீர் மரணம் - ரசிகளால் பதற்றம்! தமிழக முதல்வர் இரங்கல்!

நிஜமான சூப்பர் ஸ்டார்...ஜிம் பிரியர்... நடிகர்... புனித் திடீர் மரணம் - ரசிகளால் பதற்றம்! தமிழக முதல்வர் இரங்கல்!

 ம.பா.கெஜராஜ்,

 பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 'பவர் ஸ்டார்' என்று பிரபலமாக அறியப்படும் நடிகர், அக்டோபர் 29, வெள்ளிக்கிழமையன்று, நெஞ்சுவலி என்று புகார் கூறியதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

  காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்த விக்ரம் மருத்துவமனைக்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

  இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.   

கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமார் - பர்வதம்மா தம்பதியின் ஐந்தாவது மற்றும் இளைய மகனான புனித் ராஜ்குமார் 1975 மார்ச் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார். ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே பிரேமதா கனிகே படத்தில் புனித் தோன்றியிருக்கிறார்.

  2002ஆம் ஆண்டிலிருந்து கதாநாயகனாக நடித்துவரும் புனித்தின் முதல் படமான அப்பு அவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது.

  அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களுக்காக சமூக வலைதளங்களில் பெரிதும் அறியப்பட்டவர் புனித்.

  ஆனால், உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அவரது ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

   புனித் அனுமதிக்கப்பட்டிருந்த விக்ரம் மருத்துவமனைக்கு முன்பாக ஏராளமான ரசிகர்கள் குவிந்து  கலாட்டாவில் ஈடுபட்டனர்.

 இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் மரணம் குறித்து கேள்வியுற்று தான் அதிர்ச்சி அடைந்ததாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது குறித்து டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  அதில் மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் திரு. ராஜ்குமார் அவர்களின் மகனான பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அவர்களின் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

  எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல உறவைப் பேணி வந்துள்ளோம்.

  அந்த வகையில், தனிப்பட்ட முறையிலும் இது எனக்கு இழப்பு ஆகும். பெரும்புகழ் கொண்ட நட்சத்திரமாக விளங்கியபோதும் எளிமையான மனிதராகவே புனித் ராஜ்குமார் இருந்தார்.

  தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்குத் தமது குடும்பத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவிக்க எங்கள் கோபாலபுரம் இல்லம் தேடி அவர் வந்தது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது.

  புனித் ராஜ்குமாரின் மறைவால் கன்னடத் திரையுலகம் தன் மிகச் சிறந்த சமகால அடையாளங்களுள் ஒருவரை இழந்துள்ளது.

  இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவிக்கும் புனித் ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கும் கர்நாடக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

நிஜமான சூப்பர் ஸ்டார் புனித்ஸ்

மறைந்த புனித் நிஜமான சூப்பர் ஸ்டாராக வாழ்ந்துள்ளார். அப்படி அவர் என்னதான் செய்தார் என்பதை அறியுங்கள்.

48 இலவச பள்ளிக்கூடங்கள்,

26 ஆதரவற்றோர் இல்லங்கள்,

16 முதியோர் இல்லங்கள் ,

சுமார்1800 மாணவ , மாணவியரின் கல்வி,என தன் வருமானத்தை தனக்காக மட்டுமில்லாமல் மக்களுக்கான பயனுக்காகவும் என வாழ்ந்து வந்த கன்னட திரையுலகின் மன்னன் புனித் ராஜ்குமார் .

இன்று தன் மரணத்திலும் தன் கண்களை தானமாக வழங்கி பார்வையற்ற ஓர் பாமரனின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.