கிறிஸ்தவ நடிகை நயன்தாரா திருப்பதிக்கு வரலாமா? சர்ச்சை!!

வித்யா,
தமிழகத்தின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா இன்று காலை திருமலை திருப்பதிக்கு வந்தார். விஐபி தரிசனம் மூலமாக சுவாமி தரிசனம் செய்தார்.
அவருடன் விக்னேஷ் சிவனும் வந்திருந்தார்.
நடிகை நயன்தாரா - விக்னேஷ்சிவன் ஜோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு ரங்கநாயக மண்டபத்தில் வேதங்கள் முழங்க தேவஸ்தான பிரசாதம் வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்து அவர்களுடன் ரசிகர்கள் ஆவலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நயன்தாரா, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக அறிவித்தார்.
இந்நிலையில் நயதாரா ஒரு ஆர்.சி.கிறிஸ்தவர் என்கிற போது, அவரை திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு அனுமதித்து சரியல்லா என்று ஒரு சிலர் வில்லங்க கருத்து தெரிவித்து வருகிறார்கள்.