அடைத்து வைக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவி! சுவர் எகிறி குதித்து காதலுடன் இணைந்தார்!

அடைத்து வைக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவி! சுவர் எகிறி குதித்து காதலுடன் இணைந்தார்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

 வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவி, சுவர் எகிறி குதித்து தப்பி ஓடி காதலனுடன் சேர்ந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   

 இது பற்றின விவரம் வருமாறு,

 குமரி மாவட்டத்தில், சென்னித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி ராதிகா (வயது 21). பக்கத்து ஊரான கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் அனீஷ் (24). இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவகள் என்கிற நிலையில் பள்ளி படிப்பின் போதே காதலிக்க துவங்கினார்கள்.

 இந்நிலையில் ராதிகா கருங்கல் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். காதலன் அனீஷ் 10-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்டு வெளிநாட்டுக்கு சென்று எலக்ட்ரீசியனாக வேலை பார்த்தார்.

  இருந்த போதும், மனீஷ்  செல்போன் மூலம் ராதிகாவிடம் காதலுடன் கலந்தார்.

 இவர்களின் காதல் விவகாரம் இருவருடைய பெற்றோருக்கும் தெரிய வந்தது. இந்த காதலுக்கு ராதிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாற்று சமுதாயத்தை சேர்ந்தவரை மணமுடிக்கக்கூடாது என மகளிடம் கெடுபிடி செய்து, ராதிகாவை மேற்கொண்டு படிக்க அனுமதிக்காமல் வீட்டிலேயே அடைத்து வைத்தனர்.

   அதுமட்டுமின்றி ராதிகாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இனியும் தாமதித்தால் தன்னை காதலனிடம் இருந்து பிரித்து விடுவார்கள் என கருதிய ராதிகா, காதலன் அனீஷை தொடர்பு கொண்டு விவரத்தை கூறிய அவர் வெளிநாட்டில் இருந்து உடனடியாக புறப்பட்டு வந்து தன்னை திருமணம் செய்யும்படி வலியுறுத்தினார். 

   அதன்படி காதலன் அனீஷ் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பிறகு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காதலியை மீட்டு, உடனடியாக திருமணம் செய்வதற்காக ஏற்பாடுகளை செய்தார்.

  அதன் முதற்கட்டமாக, காதலியிடமும் செல்போனில் பேசிய அனீஷ் வீட்டை விட்டு எப்படியாவது வெளியே வந்து விடு, பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் என வழிகாட்டினார்.

ரதில் 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் கழிவறைக்கு செல்வது போல் நடித்த ராதிகா, வீட்டு சுற்றுச்சுவர் ஏறி குதித்தார். பிறகு அங்கு தயாராக மோட்டார் சைக்கிளில் நின்ற காதலன் அனீசுடன் தப்பி சென்று விட்டார்.

 பின்னர்,  நண்பர்களுடன் சென்ற காதல் ஜோடி கரவிளாகம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

  இதற்கிடையே ராதிகாவின் பெற்றோர் தன்னுடைய மகளை அனீஷ் கடத்திச் சென்று விட்டதாக மார்த்தாண்டம் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். இதனை அறிந்த காதல் ஜோடி நேற்று மாலையும், கழுத்துமாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது எங்களுடைய காதலில் உறுதியாக இருக்கிறோம், சேர்ந்து வாழப் போகிறோம் என போலீசாரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் சேர்ந்து வாழ போலீசார் அனுமதித்தனர்.