தேசிய கொடியில் பாரதியாரின் படம் வரைந்த மாணவர்கள்! லண்டன் புக்ஸ் ஆஃப் வேல்டு ரெக்கார்ட்ஸ்சில் பதிவு!!

தேசிய கொடியில் பாரதியாரின் படம் வரைந்த மாணவர்கள்! லண்டன் புக்ஸ் ஆஃப் வேல்டு ரெக்கார்ட்ஸ்சில் பதிவு!!

கு.அசோக்,

 இராணிப்பேட்டை  மாவட்டம், கலவை அடுத்த வாழைப்பந்தல் சாலையில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின விழா தொடங்கியது.

  அந்த வகையில், 78-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு  சுதந்திரப்போராட்ட வீரர் மற்றும் தமிழ் கவிஞர் மகாகவி பாரதியாரின் உருவப் படத்தை 1500 சதுர அடி பரப்பளவில் தேசிய கொடியின் மூவண்ணம் பூசப்பட்ட தேங்காய் மட்டைகள் மற்றும் தேங்காய் நார், நெல் பதர் ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கினர்.

   5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு படிக்கும் 38 மாணவர்கள் ஒன்றாக இணைந்து கூட்டு முயற்சியாக 16 நிமிடங்களில் மாணவர்கள் மூவர்ணக்கொடி மத்தியில் "மகாகவி பாரதியாரின்" உருவத்தை மிக தத்ரூபமாக வடிவமைத்தனர்.

   இந்த சாதனையை லண்டன் புக்ஸ் ஆஃப் வேல்டு ரெக்கார்ட்ஸ்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் போது பள்ளியின் தலைவர், செயலாளர், பொருளாளர்முதல்வர் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.