மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்! என்ன கொடுமை சார்... இந்த காலத்திலும் இப்படியா?!

ஜி.கே.சேகரன்,

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் புதிய பேருந்து கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்த நிலையில் அங்குள்ள அவலங்கள் மட்டும் இன்னும் மாறவேயில்லை.

 திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் கட்டண கழிப்பிடம் உள்ளது. அதனை தனி நபர் ஒருவர் ஏலம் எடுத்த நிலையில், கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் மல கழிவுகள் நேரடியாக கால்வாயில் கலந்து நிரம்பியது.

 மேலும் அந்த கால்வாய் திறந்தபடி இருப்பதால்,மது நிரம்பி சாலையில் கழிவு நீர் தேங்கி மக்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தியது.

 இது குறித்து livelook.in டிஜிட்டல் இதழில் கேடு கெட்ட திருப்பத்தூர் பேருந்து நிலையம்! வி.சி.எம். வீதியில் ஆக்கிரமிப்பு! சுட்டி காட்டிய நிலையில், கழிப்பிடம் ஒப்பந்தம் எடுத்த நபர் சார்பில் 2 பேரை கால்வாயில் இறக்கி அதனை கிளியர் செய்ய வைத்தார்.

 அந்தப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு எந்தவித சுகாதார பாதுகாப்பு அம்சங்களையும் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அந்த நாற்றம் பிடித்த கழிவுகளை சாலையிலேயே கொட்டினர். இதனால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு ஒவ்வாய்மை ஏற்பட்டது.

 கழிப்பறையில் இருந்து செப்டிக் டேங்க் கட்டி கழிவுகளை அதில் அவற்றை தேக்கி வைக்காமல், நேரடியாக கால்வாயில் கலக்க வைப்பதும், அதனை அள்ள எந்திரங்கள் இருந்தும் அதனை பயன்படுத்தாமல் மனித கழிவுகளை அகற்ற மனிதனைப் பயன்படுத்திய நிகழ்வு பெரும் வன் கொடுமையாக கருதப்படுகிறாது.

  அதுமட்டுமின்றி இச்செயல் மனித நேயத்தை இழக்க செய்யும் செயலாகும்.