தென் பென்னை-பாலாறு இணைப்பு விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கேள்வி!

ஜி.கே.சேகரன்,
தென் பென்னை பாலாறு இணைப்பு திட்டம் என்ன நிலையில் உள்ளது என விவசாயிகள் கேள்வி - ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்த ஆண்டாவது அரவையை துவங்க வேண்டும் நிலுவையில் உள்ள விவசாயிகளின் அரவை தொகையை பெற்றுதரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகரம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் -யூரியா தடுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவும் வேலூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை.
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் வேலூர்,காட்பாடி,அனைக்கட்டு,குடியாத்தம்,கேவிகுப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த திரளான விவசாயிகளும் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில் அகரம் ஆற்றின் குறுக்கே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பணை கட்டி நீரை சேமிக்க வேண்டும் தென் பென்னை பாலாறு இணைப்பு திட்டம் அறிவித்து பல ஆண்டுகளாகிறது, விவசாயிகளுக்கு பயனளிக்கும் அந்த திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பதை விளக்க வேண்டும்.
காட்டு விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், காட்டுப்பன்றிகளை விவசாயிகள் சுட அனுமதியளிக்க வேண்டும், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை நிறுத்தி 2 ஆண்டுகளாகிறது அதனை மீண்டும் துவக்கி விவசாயிகள் நலனை கருதி அரவையை துவங்க வேண்டும் அரவை நிலுவை தொகையை விவசாயிகளுக்கு பெற்று தரவேண்டும் யூரியா போன்ற உரதத்தட்டுபாடுகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் பேசினார்கள்.
கூட்டுறவு வங்கி கடனை புதுப்பிக்க விவசாயிகள் ஏற்கனவே வாங்கிய கடனை கட்ட வேண்டுமென அதிகாரிகளும் பதிலுக்கு பேசினார்கள்.