ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி செய்த நபர் கைது!

கு.அசோக்,
ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடியில் ஈடுப்பட்டு குடும்பத்துடன் தலைமறைவான நபர் கைது வாணியம்பாடி காவல்துறையினர் நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சையத்பாஷா என்பவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் சீட்டு பணம் கட்டி வந்துள்ளனா.
இந்நிலையில் கடந்த 25.10.2023 ஆம் தேதி சையத்பாஷா பொதுமக்கள் கட்டிய ஏலச்சீட்டு பணம் 50 லட்சம் ரூபாயை மோசடி செய்து குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
இதனால் சையத்பாஷாவிடம் ஏலச்சீட்டு பணம் கட்டியவர்கள் தாங்கள் பணம் கட்டி ஏமாற்றப்பட்டதாகவும், உடனடியாக சையத்பாஷாவை கைது செய்து தங்களது பணத்தை மீட்டு தரவேண்டியும் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுப்பட்டு குடும்பத்துடன் தலைமறைவாகிய சையத்பாஷா குறித்து விசாரணை மேற்கொண்டதுடன் அவரை தேடி வந்த வந்தனர்.
இந்நிலையில் சையத்பாஷாவை வாணியம்பாடி நகர காவல்துறையினர் கைது செய்து ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.