குடியாத்தத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்த சட்டமன்ற உறுப்பினர்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்டம் ,குடியாத்தம், பேரணாம்பட்டு, கே வி குப்பம், உள்ளிட்ட தாலுகாக்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர்.
அறுவடை செய்யப்படும் நெல் வேலூர், அணைக்கட்டு, உள்ளிட்ட அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே பேரணாம்பட்டு, கே வி குப்பம், குடியாத்தம், உள்ளிட்ட தாலுகா விவசாயிகளுக்கு குடியாத்தத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று தமிழக அரசு இன்று குடியாத்தம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் நேரடி கொள் நெல் கொள்முதல் நிலையத்தை இன்று குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு தொடங்கி வைத்தார்.
இதில் அரசு அதிகாரிகளும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் மையத்தை திறந்த மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.