வருங்கால மத்திய அமைச்சர் என்று கூவிய தொண்டரை செல்லமாக கடிந்து கொண்ட ஓ.பி.எஸ்!

வருங்கால மத்திய அமைச்சர் என்று கூவிய தொண்டரை செல்லமாக கடிந்து கொண்ட ஓ.பி.எஸ்!

 க.பாலஜோதி,

சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வத்தை, பிரச்சாரத்தின் போது ஒரு தொண்டர் வருங்கால மத்திய அமைச்சர் என்று குறிப்பிட்டு கோஷம் போட்டார்.
 
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அதேபோல் அங்கு ஜெயப் பெருமாள் என்பவர் அதிமுக வேட்பாளராகவும்,  ஐ யூ எம் எல்  கட்சியைச் சேர்ந்த நவாஸ்கனி திமுக கூட்டணி வேட்பாளராகவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபாவும்  மோதுகின்றனர்.

இந்நிலையில்,ஓபிஎஸ்-ஐ எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கின்ற திட்டத்தில் அவரது பெயரிலேயே பலரை அங்கு களம் இறக்கி உள்ளனர்.

ஆனால் அவர்கள் யாரும் எந்தவித களப்பணியும் ஆற்றவில்லை.

எனினும் ஓ பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில் அவர் ராமநாதபுரம் தொகுதியில் உள்ள திருப்புல்லாணி பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அப்பொழுது அங்கிருந்த கோவிலில் வழிபட்ட அவரை வாழ்த்தி அவரது தொண்டர் ஒருவர் வித்தியாசமான கோஷத்தை எழுப்பினார்.

வருங்கால மத்திய அமைச்சர்.... வருங்கால மத்திய அமைச்சர்.... வருங்கால மத்திய அமைச்சர் வாழ்க என்று கூவிக்கொண்டே இருந்தார்.

இதை அவ்வளவாக ரசிக்காத ஓ பன்னீர்செல்வம் செல்லமாக அவரை கடிந்து கொண்டார்