வேலூர்-திருப்பத்தூர்- ராணிப்பேட்டை:- “முதல்வரின் நிகழ்ச்சிகள்”காய்ச்சலால் ரத்து!

வேலூர்-திருப்பத்தூர்- ராணிப்பேட்டை:- “முதல்வரின் நிகழ்ச்சிகள்”காய்ச்சலால் ரத்து!

ஜி.கே.சேகரன்,

 வேலூர்-திருப்பத்தூர்-ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு 21 ஆம் தேதி முதல்வர் வருவதாக ஏற்பாடாகியிருந்தது. இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மேற்படி நிகழ்ச்சிகள் தேதி அறிவிக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

  வேலூரில் புதியபேருந்து நிலையம் திறப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்குதல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சி.எம்.சி மருத்துவமனை மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு, நலத்திட்டங்கள் வழங்குதல் நிகழ்வுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பாக செய்துகொண்டிருந்தார்.

 அதே போல், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கான 7 மாடி புதிய கட்டிடம் திறப்பு விழாவும் நடைபெற இருந்தது.

 அதற்காக 20 மற்றும் 21ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை,திருப்பத்தூருக்கு,வேலூருக்கு  வருகை தந்து நிகழ்சிகளில் பங்கேற்க இருந்தார்.

  இதனை முன்னிட்டு மூன்று மாவட்ட ஆட்சியர்கள் பணிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்க திமுக வினரோ விதவிதமான பேனர்களை ஒட்ட தொடங்கினர்.

   இந்நிலையில் அவருக்கு கட்டந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை நிகழ்சிகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

  ஆகவே மேற்படி மூன்று வடக்கு மாவட்ட அரசு நிகழ்ச்சிகள் தேதி குறிப்படாமல் தள்ளி வைக்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.