வேட்டி சட்டை உடையில் மோடி ரோடு ஷோ! தாமரைச் சின்னத்தை கையில் ஏந்தி வாக்கு சேகரிப்பு!

ம.பா.கெஜராஜ்,
இந்திய பிரதமர் மோடி பாஜகவுக்கு வாக்கு சேகரித்து தமிழகம் வந்துள்ளார். இன்று மாலை சென்னை வந்த அவர் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்திருந்தார்.
விமான நிலையத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட மோடி முதல் பாயிண்டில் சில முக்கியஸ்தர்களை சந்தித்து விட்டு பின்னர் வாகனத்தில் ஏறி ரோடுஷோ நடத்தினார்.
அப்பொழுது தியாகராஜ நகரில் இரு பக்கமும் பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர்.
மேலும் அவரை வரவேற்க கடவுள்களின் வேடங்கள் அணிந்து பலர் வந்திருந்தனர்.
பிரதமர் உடன் முன்னாள் ஆளுநரும் தென்சென்னை வேட்பாளருமான தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வடசென்னை பாஜக வேட்பாளர் வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆகியோர் இருந்தனர்.
அதேபோல் மயிலாட்டம் ஒயிலாட்டம் என்று கலை கட்டியது.
சென்னை தியாகராஜ நகர் பனகல்பார்கில் துவங்கிய இந்த ரோடு ஷோ சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று தேனாம்பேட்டையில் முடிவடைந்தது. பின்னர் மோடி இன்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.