இதையெல்லாம் செய்யலைன்னா? ஓட்டு போட மாட்டார்களாம்!

இதையெல்லாம் செய்யலைன்னா? ஓட்டு போட மாட்டார்களாம்!

க.பாலகுரு,

 திருவாரூர், தஞ்சைசாலை, குருநகரில் மக்களின் ஆட்சேபனையை அலட்சியப்படுத்தி உயரழுத்த செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், தவறினால் வாக்களிக்கமாட்டோம் என்று அப்பகுதி மக்கள் அறிவித்திருக்கிறார்கள். அதனுடன் பல்வேறு கோரிக்கைகளையும் எழுப்பியிருக்கிறார்கள்.

 குருநகரில் மக்களின் ஆட்சேபனையை அலட்சியப்படுத்தி உயரழுத்த செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

 திருவாரூர்¢ குரு நகர் மற்றும் குரு தெட்சிணாமூர்த்தி நகரில் நகரமைப்பு விதிகளுக்கு புறம்பாகவும், மக்களுக்கு இடையூறாகவும் செயல்படும் மைக்ரோ பைனான்ஸ் மற்றும் கனரக வாகனங்களை சாலையில் நிறுத்தி தொழில் மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

 மேற்படி பகுதியில், தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு சீர்குலைத்து குறுக்கு வழியில் கனரக வாகன போக்குவரத்தினை ஏற்படுத்தியுள்ளதை தடுத்து சாலை கட்டமைப்பை சீர் செய்ய வேண்டும்.

  நகரில் ஒதுக்குப்புறங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மது அருந்துவது கஞ்சா புதைப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுத்திட வேண்டும்.

 திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் தினந்தோறும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வர வேண்டும்.

நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த குடியிருப்பு மக்களின் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

 இந்த தகவல், நகர் நல சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் வீடுகளில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்களை ஒட்டியும் வீட்டு வாசலில் கருப்புக்கொடி கட்டியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.