பா.ஜ.க. எம்.எல்.ஏக்களை தூக்குவோம்-திமுக? முடிந்தால் தூக்கிபார் பா.ஜ.க. பரபர!

ம.பா.கெஜராஜ்,
இரண்டு பா.ஜ.க. எம்.எல்.ஏக்களை தூக்குவோம் என்று திமுக எம்பி செந்தில் குமார் சவால் விட, அதற்கு முடிந்தால் எங்கள் எம் .எல் .ஏ.க்களை தூக்கிப் பாருங்கள் என்று பா.ஜ.க. சார்பாக வானதி எதிர் சவால் விட்டுள்ளார்.
திருச்சி சிவாவின் மகன் பா.ஜ.க.வில் இணைந்ததே இந்த சவால்களுக்கு காரணம்.
திமுக வின் தீவிர விசுவாசியும், ராஜ்யசபா எம்.பி, மற்றும்திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா சிவா. இவர், திமுக.,விலிருந்து விலகி நேற்று (மே 08) தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.
இது தொடர்பாக சூர்யா கூறுகையில்,மாற்றுக் கட்சியில் இணைய தனது தந்தை மறுத்த நிலையில் அதனை மீறி பா.ஜ.,வில் இணைந்தேன். சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பா.ஜ.,வில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விரும்புகிறேன்' என்றார்.
இது தொடர்பாக தர்மபுரி லோக்சபா தொகுதி திமுக எம்.பி.,யான செந்தில்குமார் தெரிவிக்கையில், திமுக.,வில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பா.ஜ.,வுக்கு ஒரு தகவல். உங்கள் கட்சியின் இரண்டு எம்எல்ஏ.,க்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம்.என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன், முடிந்தால் தூக்குங்கள், பார்க்கிறோம் எனக் கூறினார்.
மேற்படி இருவரின் கருத்துகளும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.