எம்.எம்.நரவானே முப்படை தளபதி ஆனார்!

எம்.எம்.நரவானே முப்படை தளபதி ஆனார்!

 டி.முகமது இர்ஃபான்,

 இந்திய நாட்டு ராணுவத்தின் முப்படைதளபதியாக திரு.எம்.எம்.நரவானே பதவி ஏற்றுக் கொண்டார்.

  ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்த நிலையில், தற்போது நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.

 இந்தியாவின் முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக இருந்தவர் பிபின் ராவத். குன்னூரில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இதில் ராணுவ தளபதி பிபின் ராவத்தும் ஒருவர். இதனால் முப்படைகளுக்கான தலைமை தளபதி பதவி காலியாக இருந்தது.

   இந்நிலையில் முப்படை தலைமை தளபதி தேர்வு செய்யப்படும் வரை எம்.எம். நரவானே குழு தலைவராக செயல்படுவார் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.