தமிழ் நாடு ஆதிதிராவிடர் நலதுறைக்கு ஆபத்தா?

தமிழ் நாடு ஆதிதிராவிடர் நலதுறைக்கு ஆபத்தா?

 ஜி.சாந்தகுமார்,

  தமிழ் நாடு ஆதிதிராவிடர் நலதுறைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

 பட்ஜெட் கூட்ட தொடரில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நல பள்ளிகளை கல்வித்துறையின் கீழ் இணைக்கும் அறிவிப்பும் வெளியாகியிருந்ததால் இந்த பேச்சு எழுந்துள்ளது.

  இது பற்றின விவரம் வருமாறு,

தமிழ்நாட்டில் சுமார் 512 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதிகள் இருக்கின்றன. இவற்றில் இளங்கலை, முதுகலை போன்ற கல்லூரி மாணவர் விடுதிகளும் அடக்கம். இவையனைத்தும் தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் நேரடி காட்டுப்பட்டில் இயங்கக் கூடியவையாகும்.

    இந்த 512 விடுதிகளில் விடுதி ஒன்றுக்கு ஒரு விடுதி காப்பாளர், ஒரு சமையலர், ஒரு உதவியாளர், ஒரு காவலாளி, இரண்டு தூய்மைப் பணியாளர் என ஆறு ஆதிதிராவிடர் / பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். ஒரு விடுதிக்கு ஆறு அரசு ஊழியர்கள் என்றால், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஐநூற்று பன்னிரெண்டு விடுதிகளில் மொத்தம் மூவாயிரத்து எழுபத்தி இரண்டு (512வூ6=3,072) ஆதிதிராவிடர் / பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    2023-2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை (20.03.2023) தமிழ்நாடு அரசு சட்ட மன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. அந்த நிதிநிலை அறிக்கையில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நல பள்ளிகளை கல்வித்துறையின் கீழ் இணைக்கும் அறிவிப்பும் வெளியாகியிருந்தது.

 ஏற்கெனவே ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் பணியிடங்களை கலைக்கும் திட்டம் அரசுக்கு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

  இந்தநிலையில், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நல பள்ளிகளை கல்வித்துறையின் கீழ் இணைக்கும் தமிழக அரசின் அறிவிப்பானது ஆதிதிராவிடர் நலத்துறையை கலைக்கும் திட்டம் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

   தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை பார்க்கின்றபோது அடுத்த டார்கெட் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நல மாணவர் விடுதிகளாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள் நேரடியாக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள 512 விடுதிகளில் பணிபுரியும் 3,072 ஆதிதிராவிடர் /  பழங்குடியினர் பணியிடங்கள் இனிவரும் காலங்களில் தற்போதைய இட ஒதுக்கீட்டின்படி பொதுவானதாக மாற்றப்படும் . இதனால் ஆதிதிராவிடர் /  பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 3,072 அரசு ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும் அபாயம் உள்ளது.

  எல்லாம் சரி இதுவரை அந்த துறை அதிகாரிகள் ஒழுங்காக பணிபுரிந்தார்களா எனில் இல்லை என்பதே உரிய பதிலாக இருக்கிறது.