39 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துக்கொண்ட காவல் துறையினர்! நெகிழ்ச்சியில் திளைத்தனர்!!

தெ.நெல்சன்,
கடந்த 25.10.1984-ல் இரண்டாம் நிலைக் காவலர்களாக சேர்ந்த 217 பேர் வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயின்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போது வேலூர், திருவண்ணாமலை, இராணிப் பேட்டை & திருப்பத்தூர் மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், சென்னை சிட்டி போலீஸ் என பணியமர்த்தப்பட்டனர்.
பணியமர்த்தப்பட்டு 39 ஆண்டு காலத்தில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று பலர் உதவி ஆய்வாளர், ஆய்வாளர், துணை காவல் கண்காணிப்பாளர் & உதவி கமிஷனர் வரை பணிபுரிந்து வருவதோடு தற்போது சிலர் ஓய்வும் பெற்றுள்ளனர் ,
அப்படியிருக்க அவர்களில் சுமார் 50 பேர் நேற்று -புதன்கிழமையன்று வேலூர் பயிற்சி மைதானம் அருகே சந்தித்துக்கொண்டனர்.
அப்போது காவல் பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் அவர்கள் அனைவரும் பணியின்போது நடந்த பழைய வீர தீர பணிகளை அளவளாவியதோடு, தங்கிய இடம், பயிற்சி பெற்ற இடம் ஆகியவற்றை பார்த்து பரவசபட்டனர்.
இனி வரும் காலங்களில் பணியிலுள்ள காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் எவ்வாறு உதவலாம் என்றும் உடல்நலம் பேணுதல், இந்த தலைமுறையோடு ஒத்துபோதல் போன்ற சிறப்புகளை கலந்துரையாட பின்னர் இந்த சந்திப்பு இனிதே நிறைவு பெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற ஆய்வாளர்கள் மாறன், பாலாஜி, இராஜேந்திரன், நரசிம்மன், வரவேற்புரை குணசேகரன் உதவி ஆய்வாளர் (ஓ) அவர்கள் வழங்கினார்.
நன்றியுரை ஆனந்தன் உதவி ஆய்வாளர் (ஓ) ஆற்றினார்.