பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்! காவல் துறை தலைமை இயக்குனர் சீமா அகர்வால்!

Ma.ba.Gajaraj,
வேலூர் நறுவீ மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா – காவல் துறை தலைமை இயக்குனர் சீமா அகர்வால் தொடங்கி வைத்தார்
வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காவல் துறை தலைமை இயக்குனரும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவருமான சீமா அகர்வால் சுற்று சூழல் பாதுகாப்புக்காக வீடுகள் தோறும் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்று விளங்கும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் 8-ம் நாள் சர்வதேச மகளிர் தினமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் நறுவீ மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்து வரவேற்று பேசுகையில் குடும்பத்திலும், சமுதாயத்திலும் மகளிரின் பங்களிப்பு மற்றும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் அவர்களை கௌவரப்படுத்தும் வகையில்; இங்கு விழா நடத்தப்படுகிறது. பெண்கள் இல்லாமல் எதுவும் இல்லை, பிறந்த குழந்தை முதல் பெரியவர்களாக வளரும் வரை அவர்களை பராமரித்து பாதுகாப்பது பெண்களின் பணியாக உள்ளது. நமது நாட்டை தாய்நாடு என்று தான் கூறுகிறோம். இந்திய நாட்டின் பெருமை, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் உயர்வுக்கு மகளிர் காரணமாக உள்ளனர். தற்போது பெண்களுக்கு பல்வேறு துறைகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இது போதாது, இதனை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றார்.
நறுவீ மருத்துவமனை மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. இங்கு பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பெண்களாக உள்ளனர். இது பெண்கள் நிறுவனமாக விளங்கி வருகிறது. தற்போது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மகளிர் தின விழா நடத்தப்பட்டு வருகிறது. நாள் தோறும் பெண்களை போற்றும் விதமாக மகளிர்தினத்தை நாம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் காவல் துறை தலைமை இயக்குனரும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவருமான சீமா அகர்வால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் வீடுகள் தோறும் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகையில் கூறியதாவது:
சமுதாயத்தில் பெண்களின் பங்களிப்பு, அதிகாரம் பெறுதல் உள்ளிட்டவை பல்வேறு கால கட்டங்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. பெண்களின் வாழ்க்கை முறை மூன்று கட்டங்களாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். கல்வி, திருமணம், குடும்ப பராமரிப்பு ஆகியவை முக்கியமாக உள்ளது. பல்வேறு துறைகளை எடுத்துக் கொண்டால் பெண்களின் பங்களிப்பு என்பது முக்கியமானதாக உள்ளது. படிக்கும்போது மருத்துவராக வர வேண்டும் என்று விரும்பிய நான் பொறியாளராக ஆக வேண்டும் என்று எனது எண்ணம் மாறிவிட்டது. பொறியாளராக மாறிய பின்பு சிவில் சர்வீஸ் பணியில் சேர விரும்பி ஐ.பி.எஸ். தேர்வு எழுதி தமிழ்நாட்டில் காவல் துறைக்கு பணிக்கு வந்துவிட்டேன்.
குடும்பம் மற்றும் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காக உள்ள பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சம்மந்தமாக ஏதாவது குறை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெற்று உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை கதிரியக்க துறை தலைமை மருத்துவர் ஆசாக் மித்ரா, புற்றுநோயியல் மருத்துவர் சிந்து, உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை தலைவர் முனைவர் லீபிகா கபு+ர் ஆகியோர் பங்கேற்று பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு மற்றும் வளர்ச்சி பற்றி பேசினார்கள்.
இதில் மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் திலீப் மத்தாய், மூளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மாத்யு+ சாண்டி, தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், தலைமை நிதி அலுவலர் வெங்கட்ரங்கம், பொது மேலாளர் நிதின் சம்பத் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.