நான்கு நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தம்! சோளிங்கர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

கு.அசோக்,
சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோவிலில் மாதந்திர பராமரிப்பு காரணமாக 16 ம் தேதியில் இருந்து 19 வரை ரோப்கார் சேவை நிறுத்தம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு - இருப்பினும் மழை மற்றும் காற்றின் காரணமாக ரோப் கார் சேவை முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோவிலில் கார்த்திகை திருவிழா நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புயல் மழையின் காரணமாக நேற்று ரோப்கார் சேவை நிறுத்தம் செய்துள்ளதாகவும் மேலும் ரோப்கார் மாதந்திர பராமரிப்பு காரணமாக இந்த மாதம் 16 .12.2024 ம் தேதியில் இருந்து 19.12.2024 வரை ரோப்கார் சேவை நிறுத்தம் செய்வதாகவும் பக்தர்கள் படிகள் வழியாக ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.