சாலை வரியை உயர்த்துவதை நிறுத்த கோரிக்கை!

ஜி.கே.சேகரன்,
தமிழக அரசு 23 ஆண்டுகளுக்கு பிறகு சாலை வரியை உயர்த்துவதால் லாரி தொழில் முற்றிலும் பாதிக்கபடும் அதனை கைவிட வேண்டுமென லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலூரில் பேட்டி
வேலூர்மாவட்டம், காட்பாடியில் வேலூர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தலைவர் செல்வகுமா£,¢ செயலாளர் லோகநாதன், பொருளாளர் சுகுமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசு கடந்த 23 ஆண்டுகளாக உயர்த்தாத சாலை வரியை 50 சதவிகிதம் உயர்த்த போவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரன் நேற்று லாரி உரிமையாளர்களை சந்தித்து கூறினா£.¢ இதனால் வரி பல மடங்கு உயரும் ஏற்கனவே லாரி தொழில் நலிவடைந்துள்ளது. தேர்தல் வாக்குறுதி படி தமிழக முதல்வர் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளை நீக்குவோம் என கூறினார்கள் ஆனால் இதுவரையில் அகற்றப்பட்டவில்லை.
அதனை உடனடியாக அகற்ற வேண்டும் வேலூர் போக்குவரத்து அலுவலகத்தில் ஓராண்டுகாலமாக வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. விழுப்புரத்தை சேர்ந்தவர் கூடுதல் பணியாக கவணிப்பதால் பணிகள் பாதிக்கபடுகிறது.
எனவே வட்டார போக்குவரத்து அலுவலரை உடனடியாக நியமிக்க வேண்டும். இன்சூரன்ஸ் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துவிட்டது லாரியில் சம்பாதிக்கும் 75 சதவிகிதம் சுங்கச்சாவடி டீசல் வரி காப்பீடுகளுக்கே செலவாகிறது 25 சதவிகிதத்தை வைத்து லாரிக்கு வட்டி கட்ட வேண்டும் எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கபடுகிறது. எனவே வருங்காலங்களில் லாரி தொழில் முற்றிலுமாக நசுக்கபடும் அபாயம் உள்ளது எனவே வரி உயர்வை திரும்ப பெற வேண்டுமென கூறினார்கள்.