திருப்பதிக்கு சென்ற துர்கா ஸ்டாலின்!

திருப்பதிக்கு சென்ற துர்கா ஸ்டாலின்!

 வி.டி.வித்யாசாகர்,  

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 15 ஆம் தேதி முதல்  தொடங்க உள்ளது, இதனால் விஐபி பிரேக் தரிசனம் உட்பட அனைத்து சிறப்பு தரிசனங்களையும் தேவஸ்வதான நிர்வாகம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

  தீவிர கடவுள் பக்தரான துர்கா ஸ்டாலின் சமீபத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சென்றார். அதற்கு முன்பாக குருவாயூர் கோவிலுக்கு சென்று தங்கக் கிரீடம் காணிக்கையாக வழங்கினார். சந்தனக்கட்டைகள் அரைக்கும் எந்திரங்களையும் கோவிலுக்கு வழங்கினார் துர்கா ஸ்டாலின். இந்நிலையில் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால்  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார் துர்கா ஸ்டாலின்.

   அவரை தேவஸ்தான் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுத்த தேவஸ்தான அதிகாரிகள், தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். திருமலையில் தங்கிய துர்கா ஸ்டாலின், காலை அபிஷேக சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசிர்வாதம் செய்து, தீர்த்த பிரசாதம் மற்றும் லட்டு பிரசாதங்களை வழங்கினர்.