ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தை அப்பல்லோ நம்பவில்லையாம்!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தை அப்பல்லோ நம்பவில்லையாம்!

 ம.பா.கெஜராஜ்,

 ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ தெரிவித்துள்ளது.

  ஜெயலலிதா செப்டம்பர் 22, 2016 அன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். முந்தைய நாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார்.

 ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகன் உள்ளதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டதுஸ்.

  இந்நிலையில் அந்த ஆணையத்தின் செயல்பாடுகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால், அவர்களின் சம்மன்களை மருத்துவர்கள் புறக்கணித்ததாக, அக்டோபர் 26, செவ்வாய்கிழமை சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

   மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்திற்கு வழிவகுத்த மருத்துவமனை மற்றும் காரணங்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையம் பணிக்கப்பட்டது. 2017 செப்டம்பரில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை எதிர்த்து அப்பல்லோ தாக்கல் செய்த வழக்கின் ஒரு பகுதியாக செவ்வாய்கிழமை விசாரணை நடைபெற்றது.

 அதிமுக அரசின் உத்தரவின் பேரில் மருத்துவமனையில் இருந்து சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக அப்போலோ கூறியது.

 முன்னதாக, 2018 டிசம்பரில், அப்போலோ மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், முன்னாள் அதிமுக தலைவரின் மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி (ஓய்வு) ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்திடம், சிசிடிவி கேமராக்கள் அவ்வப்போது அணைக்கப்படுவதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில் தான் 2018 செப்டம்பரில் இந்த விசாரணை ஆணையம் வழங்கிய சம்மன்களை அப்பல்லோ மருத்துவர்கள் புறக்கணித்தனர். அந்த நேரத்தில் சம்மனைத் தவிர்த்தால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படும் என சிஓஓ எச்சரிக்கப்பட்டார்.

  ஆரம்பத்தில் ஒரு மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையத்திற்கு ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

  இருந்த போதும் தற்போது அப்பலோ நிர்வாகத்தால் அந்த ஆணையம் கேலிக்கூத்தாகப் பார்க்கப்படுகிறது.