மாணவிகளை ஆபாச வார்த்தையால் அர்ச்சனை செய்யும் தலைமை ஆசிரியர்! ஊடகவியலாளர்கள் மீது பொய் புகார்!

மாணவிகளை ஆபாச வார்த்தையால் அர்ச்சனை செய்யும் தலைமை ஆசிரியர்! ஊடகவியலாளர்கள் மீது பொய் புகார்!

ம.பா.கெஜராஜ்,

பள்ளி மாணவிகளை ஆபாச வார்த்தையால் அர்ச்சனை செய்யும் தலைமை ஆசிரியர்! மாணவி மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி! தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க பெற்றோர் மனு அளித்தனர்.

   திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையாம்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதில் 400க்கும் மேற்பட்ட  மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக சாந்தி பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பள்ளி மாணவிகளை சாந்தி தகாத முறையில் ஆபாச வார்த்தைகள் திட்டி வருவதாக தெரிகிறது.

  இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர்  வகுப்பு பள்ளி  மாணவிகளுக்கு பெற்றோர் சந்திப்பு கூட்டம் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பெற்றோர் சந்திப்பு கூட்டத்திலேயே பெற்றோர்கள் முன்னிலையில் மாணவிகளையும் பெற்றோர்களையும் ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.  

இதனால் மன உளைச்சல் அடைந்த  ரோஷினி என்ற 16 வயது சிறுமி வீட்டில் மாத்திரை தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவி கடிதம் எழுதிய போது இதை அவரது தாய் கவனித்து தடுத்துள்ளார். மேலும் ரோஷினியின்  தாயார் மணிமொழி செவிலியர் என்பதால் மாணவிக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரை காப்பாற்றியுள்ளார்.

  பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ள சாந்தியின் செயல்பாடுகள் பிடிக்காமல் இதுவரை சுமார் இந்த பள்ளியில் இருந்து 13 மாணவிகள் மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு அருகாமையில் உள்ள பள்ளிக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

  இந்நிலையில் ரோஷினி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து மீடியாக்களில் வெளியான செய்தியை அறிந்த  திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  முனி சுப்புராயன் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.

  ஆனாலும் கூட சாந்தி மீது  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர் மெத்தனம் காட்டினார்.

 இதனால் ஏமாற்றம் அடைந்த ரோஷினியின் தாய் மணிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன் அவர்களை சந்தித்து கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

 அவர் அளித்த மனுவில் தலைமை ஆசிரியர் சாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

  இது குறித்து மணிமொழி பேசுகையில் பெண் பிள்ளைகளை பார்த்து தகாத வார்த்தைகளால் தலைமையாசிரியர் சாந்தி பேசியுள்ளார். உங்களுக்கு இந்த ஸ்கூல் பிடிக்கவில்லையென்றால் பக்கதில் ஆண்கள் பள்ளிகூடத்துக்கு போய் உரசிக்கொண்டு உட்காருங்கள், படுத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் ஆபாசமாக பேசியுள்ளார்.

   என் மகள் இங்கிலீஷ் மீடியம் படித்தவள். அரசு பள்ளியில் சேர வேண்டும் என விரும்பி கேட்டு வந்து இந்த பள்ளிக்கூடத்தில் சேர்த்ததற்கு இது தான் பரிசா? இது தொடர்பாக விளக்கம் கொடுப்பதற்குக்கூட வேறு பள்ளி ஆசிரியர் வந்து அநியாயத்துக்கு பேசுகிறார். ஆகவே இப்படி ஆபாசமாகவும், அடாவடியாகவும் பேசும் அந்த தலைமை ஆசிரியரை இங்கிருந்து மாற்றியாக வேண்டும் என்கிறார் மணிமொழி.

  அப்படியிருக்க இந்த செய்தியை கடமையுணர்வோடு வெளியிட்ட ஊடகவியாளர்கள் சிலர் மீது ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பொய் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதை விட கூடுதலாக மாணவ மாணவிகளை வைத்தே தலைமையாசிரியரை மாற்றக்கூடாது என்று ஸ்டிரைக் செய்ய வைத்து மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

  இந்நிலையில் தான் இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு புகாராக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 ஆனாலும் இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை. ஆகவே மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, படிக்க அனுப்பிய மாணவிகளை முன்னிறுத்தி ஸ்டிரைக் செய்ய வைப்பது மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் போலீசில் பொய் புகார் அளிப்பது போன்ற செயல்களை குறிப்பிட்டு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்டு சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உள்ளது.

  இந்த சம்பவம் குறித்து தலைமையாசியர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படுமேயானால் அவை பரிசீலித்து பிரசுரிக்கப்படும்.