வேட்டை துப்பாக்கிகள் பறிமுதல்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை வழக்கில் விசாரணை மேற்கொள்ள சென்ற போது, சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பூங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பலப்பல்நத்தம் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி நகைக்காக கொலைச்செய்யப்பட்டார்.
இந்நிலையில், மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் பூங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது, அப்பகுதியில் வெங்கடேசன் என்பவரது வீட்டில், காவல்துறையினர் சோதனை செய்த னர்.
அப்போது வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டுத்துப்பாக்கியை ஆலங்காயம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நாட்டுத் துப்பாக்கியை வீட்டில் பதுக்கி வைத்து, தலைமறைவாக உள்ள வெங்கடேசனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.