அறுந்து கிடக்கும் மின் ஒயர்கள் ஜாக்கிரதை!

அறுந்து கிடக்கும் மின் ஒயர்கள் ஜாக்கிரதை!

 க.பாலகுரு,

குத்தாலம் அருகே வயலில் அருந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உயிருக்கு போராடிய பெரியம்மாவை காப்பாற்ற சென்ற 11ம் வகுப்பு மாணவன் ஆகிய இருவரும் பலியான சம்பவம் குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா வழுவூர் ஊராட்சி பெரியேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சந்திரா.45. திருமணமாகாத இவர் இன்று மாலை தனது தங்கை மகன் 11ம் வகுப்பு படிக்கும் மணிகண்டன் ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான வாழை கொல்லையில் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆட்டை ஓட்டச் சென்றுள்ளார்.

   அப்போது காற்றின் காரணமாக  அறுந்து விழுந்து கிடந்த மோட்டாருக்கு செல்லும் மின்சார கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்ததில் மின்சாரம் தாக்கி சந்திரா உயிருக்கு போராடியுள்ளார்.

   தனது பெரியம்மாவை காப்பாற்ற முயற்சித்த மணிகண்டனையும் மின்சாரம் தாக்கியது.  இதில் சம்பவ இடத்திலேயே சந்திரா பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு  மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

   தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் உள்ளிட்ட இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.