மஞ்சப்பை பழங்கிய கலெக்டருடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட மக்கள்!

மஞ்சப்பை பழங்கிய கலெக்டருடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட மக்கள்!

  கு.அசோக்,

வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மாற்றாக துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வேலூர்மாவட்டம்,

 வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று பிளாஸ்டிக்கை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை என மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி விழிப்புணர்வை ற்படுத்தினார்.

 இராணிப்பேட்டைமாவட்டம்,

  இராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை உழவர் சந்தையில் பிளாஸ்டிக் பைகளை முற்றிலுமாக ஒழிக்கும் வகையிலும் அதற்கு மாற்றாக துணி பைகளை பயன்படுத்தி இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதில் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் தனியார் தொழிற்சாலை பணியாளர்கள் அனைவருக்கும் ஆட்சியர் இலவசமாக மஞ்சள் பைகளை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

  மேலும் சந்தையில் இயற்கை விவசாயம் மற்றும் உழவர் சந்தையின் நிலவரத்தை குறித்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று கேட்டறிந்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள்  வியாபாரிகளுடன் ஆட்சியர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.