பிரமாத ஓவியங்கள்!

கு.அசோக்,
பள்ளி மாணவ மாணவர்களுக்கான ஓவியப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் உள்ள ரயில்வே திருமண மண்டபத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் மாவட்ட முழுவதிலிருந்தும் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
வயது அடிப்படையில் நான்கு பிரிவுகளாக ஓவியப்போட்டி நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் ஓவியங்களை வரைந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் கோப்பைகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.