ஸ்கேட்டிங் மூலம் சிறுவர்கள் விழிப்புணர்வு பேரணி!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
போக்குவரத்து விதிமுறைகளுக்காக ஸ்கேட்டிங் மூலம் சிறுவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க கோரியும், விளையாட்டுக்கள் மூலம் உடல் நலத்தை பாதுகாக்கலாம் என்பதை வலியுறுத்தியும் ரோட்டரக்ட் கிளப் ஆஃப் யெங் வைப்ரன்ட் மற்றும் ராகுல் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி இணைந்து கோவை வ.உ.சி. மைதானத்தில் ஸ்கேட்டிங் பேரணியை நடத்தியது.
இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான ஸ்கேட்டிங் மாணவர்கள் கலந்து கொண்டு ஸ்கேட்டிங் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து இணை ஆணையர் மதிவாணன், போக்குவரத்து துணை ஆணையர் சரவணன், ரோட்டரி கிளப்பை சேர்ந்த சுஜாதா, ஸ்கேட்டிங் கிளப்பை சேர்ந்த ராகுல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி ஸ்கேட்டிங் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.