கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கு பணிகள் தீவிரம்

கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கு பணிகள் தீவிரம்

 கு.அசோக்,

  இராணிப்பேட்டைமாவட்டம்,சோளிங்கர் நகராட்சி உட்பட்ட 27 வார்டுகளில் குற்றசம்பவங்களை கண்காணிக்க  நகராட்சியின் உள்ள ஒவ்வொரு தெருவிற்கு,கூட்டு சாலை பகுதிகள்,பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் அதி நவீன கண்காணிப்பு கேமிரா பொருத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

   அதன்படி கடந்த  நகரமன்ற கூட்டத்தில் நகராட்சி முழுவதும் 120 கேமிரா 32லட்சம் மதிப்பில் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   அதனை தொடர்ந்து நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்   120 கம்பங்கள் நடப்பட்டு கேமிரா பொருத்தப்பட்டு ஒயர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

  இந்த கேமிரக்களை கண்காணிக்க நகராட்சி பகுதியில் நான்கு இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு  கண்காணிப்பு பணி நடைபெற்ற உள்ளது. இந்த பணி  முழுவதும் முடிந்த பிறகு சோதனை செய்யப்பட்டு  குற்றசம்பவங்களைகுறைக்க  கண்காணிக்க உள்ளனர்.