ரயில் தண்டவாளத்தை மெத்தனமாக கடந்தவர் பலி!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (50) தோல் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் இரண்டு மகன்கள் உள்ளனர்.இன்று காலை இவர் சென்னைக்கு செல்வதற்காக ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு
வந்து தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்