எங்கள் கிராமத்தை நகராட்சியில் சேர்க வேண்டாம்! பொது மக்கள்!

கு.அசோக்,
பாண்டியநல்லூர் சோமசமுத்திரம் ஆகிய கிராமங்களை சோளிங்கர் நகராட்சியில் சேர்க்க கூடாது என மக்கள் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியம், பாண்டியநல்லூர் ஊராட்சியில் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ரகுராம் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து குறைகளை கேட்டறிந்தார்.
விவசாயத்தை மட்டும் பிரதான தொழிலாக செய்து வரும் பாண்டியநல்லூர் ஊராட்சி, சோமசமுத்திரம் ஊராட்சியை சோளிங்கர் நகராட்சியில் சேர்க்கக்கூடாது
எனவும் அரசுக்கு தெரியப்படுத்தி கிராம ஊராட்சிகளை கிராம ஊராட்சிகளாகவே இருக்க வழிவகை செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.
ஏரி கால்வாய் தூர்வார நீராவள துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும், ஊராட்சியில் கழிவறை இல்லாதவர்கள் கழிவறை கட்டிடம் கோரி விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் வட்டாட்சியர் ராஜலட்சுமி,வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா, வருவாய் ஆய்வாளர் தமிழரசி, வழக்கறிஞர்கள் ரகுராம்ராஜ், சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.