பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை! கைது இல்லை என அமலாக்கத்துறை இயக்குநர் தகவல்!

பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை! கைது இல்லை என அமலாக்கத்துறை இயக்குநர் தகவல்!

 ம.பா.கெஜராஜ்,

 செம்மண் குவாரி விவகாரத்தில் 28.5 கோடி ரூபாயை அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக பொன்முடியிடம், அமலாக்கதுறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவரை கைது செய்யவில்லை  என அமலாக்கதுறை இயக்குநர் செய்தியாளர்களிடம் சொன்னார்.

 உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனிவீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.  காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 13 மணி நேரத்துக்கு பிறகு முடிவடைந்த நிலையில் அவர் மாலையில் நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்க துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது மகனும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணியும் உடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

 இந்நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணிக்கு  நிறைவடைந்தது.

 விசாணையின் போது அமைச்சரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.னதன் பின்னர் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார்.

 அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது என வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கையை மீறி பொன்முடிக்கு மன உளைச்சல் அளிக்கப்பட்டுள்ளது.

 கவர்னரை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பொறுமையாக பதிலளித்தார் என தெரிவித்தார்.

   இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமலாக்கத் துறை துணை இயக்குநர் கார்த்திக், அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை என சொன்னார்.

  மேற்படி பொன்முடியின் சைதாப்பேட்டை வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது ஒரு ஆண் மற்றும் பெண் உணவு விநியோக ஊழியர்கள் பிரியாணியும், பர்கரும் கொண்டு வந்துள்ளனர். அதில் பர்கர் அமலாக்க துறை அதிகாரிகள் வரவழைத்ததாக கூறப்படுகிறது.