எசகு பிசகாக மாட்டிக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி!

ம.பா.கெஜராஜ்,
அதிமுக வை ஆட்டையை போட முயன்ற எடப்பாடி பழனிசாமி தற்போது எசகு பிசகாக மாட்டிக்கொண்டார் என்றே அரசியல் கணிப்பாளர்கள் சொல்கிறார்கள்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் நடைபெற்ற, அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக, தொடர்ந்த வழக்கில், கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். அதில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக,தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில், ஜூன் மாதம் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் என்றும் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர், கட்சி நலன் கருதி மீண்டும் இணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். மேலும், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் அரவணைக்க முயன்றாரெ.
இப்படி ஓ.பன்னீர்செல்வத்தின் அழைப்பை வெளிப்படையாக நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, அவருடன், மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என தெனாவட்டாக சொன்னார்.
இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து வரும் 30 ஆம் தேதி அல்லது செப்டம்பர் 1 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியிருக்க அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள ஆதரவாளர்கள் பலர்ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வரிசைக்கட்டிக் கொண்டு வருகிறார்கள்.
ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என, பல்வேறு நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன், சென்னையில், தனது ஆதரவாளர்களுடன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இப்படி ஒவ்வொருவராக ஓ.பன்னீர்செல்வம் அணியை நோக்கி வரிசைக்கட்டி வருவது, எடப்பாடி பழனிசாமியை எசகு பிசகாக சிக்கவைத்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த சூட்டை அப்படியே தக்க வைக்க திட்டமிட்டிருக்கு ஓபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்க புரட்சிப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக சொல்லி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிலியை கொடுத்துள்ளார்.ஸ்
எது எப்படியோ? எடபாட்டி அபகரிக்க நினைத்த அதிமுக தற்போது சரியான தலை