வெயிட் அண்ட் சி! கண்சிமிட்டும் கர்நாடக பா.ஜ,க!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அருதி பெருபாண்மையை பெற்றிருந்தாலும், யாரை முதல்வராக அமரவைப்பது என்று திணறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெயிட் அண்ட் சி என்று பா.ஜ,க. கண்சிமிட்டுகிறதாம்.
முதல்வரை காங்கிரஸ் கட்சி மேலிடம் தேர்வு செய்யும் என்று கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தொடர்ந்து சர்ச்சையாகவே இருந்து வருகிறது.
இதையடுத்து முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் டெல்லி சென்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்வை சந்தித்து பேசினார். இவரைத் தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நேற்று டெல்லி புறப்பட்டு சென்று, மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசினார்.
இருவரின் பேச்சுவார்த்தையின் போது, கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்று அவரிடம் கூறி டிகே சிவக்குமாரிடம் கருத்து கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதற்கு டி.கே.சிவகுமார் 'எனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்றால், நான் சாதாரண சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்ற தயார்.
சித்தராமையா கட்சியில் இணைந்தது முதல், ஒன்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அல்லது முதலமைச்சர் என்று அதிகாரத்திலேயே இருந்து வந்துள்ளார்,' என்று டிகே சிவக்குமார் மல்லிகார்ஜூன கார்கேவிடம் இடித்துக்காட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வெயிட் அண்ட் சி என்கிற பாணியில் பா.ஜ.க. சில திட்டங்களை கையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அநேகமாக அது, டி.கே.எஸ்ஸின் ஆதரவு எம் .எல் .ஏ.க்களை குறி வைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அதனால் தான் நான் சாதாரண எம் .எல் . ஏ வாக இருந்துக் கொள்கிறேன் என்று அவர் கார்கேயிடம் சொன்னதாக சொல்கிறார்கள்.