வேலுமணிக்கு தமிழிசை சப்போர்ட் அண்ணாமலைக்கு எதிர்ப்பு

வேலுமணிக்கு தமிழிசை சப்போர்ட் அண்ணாமலைக்கு எதிர்ப்பு

 ஜி.சாந்தகுமார்,

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருந்தால் திமுகவுக்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்று தென் சென்னையில் தோல்வியைத் தழுவிய  தமிழிசை கூறியிருக்கிறார். இது அண்ணாமலையின் கருத்துக்கு எதிரானது என்பதால் சற்று கவனிக்க வேண்டிய விஷயமாக இடம் பெற்றிருக்கிறது.

 மக்களவைத் தேர்தல் முடிவுகள்படி அதிமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவும் பாஜகவும் கூட்டு வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று பரவலான கருத்து எழுந்தது.

  அதிமுக கூட்டணியில் பாஜக இருந்திருந்தால் 30 - 35 தொகுதிகள் வரை வென்றிருப்போம் என்று தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, கூட்டணி முறிய அண்ணாமலைதான் காரணம் என்று குற்றம்சாட்டி இருந்தார். ஆனால், 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்று அண்னாமலை பதிலடி கொடுத்தார்.

  இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "தென் சென்னையில் ஒரு நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க தவறிவிட்டீர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து. சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் தேர்தலில் நிற்கிறோம். இல்லை என்றால் ஆளுநராகவே நான் இருந்திருப்பேன். திமுக இணையதளப் பிரிவினரை ஸ்டாலின் அடக்கி வைக்க வேண்டும். தோல்வி என்பது எல்லோருக்கும் வரும். இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள்.

  அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருந்தால் அதிக இடங்களில் வென்றிருக்கலாம் என வேலுமணி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, "அது யதார்த்தமான உண்மைதான். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருந்தால் திமுகவுக்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்பது கணக்கீடு ரீதியாக உண்மை. வாக்குகள் பிரிந்த காரணத்தால் திமுக வெற்றிபெற்றுள்ளது என்றார்.