ஆட்சியில் பங்கு? நான் என்னத்த சொல்ல.... அமைச்சர் துரைமுருகன்!

ஜி.கே.சேகரன்,
அதிகாரத்தில் பங்கு ஆனால் ஆட்சியில் பங்கு கிடையாது என்று ஐ.பெரியசாமி கூறியதும் பதில் அளிக்கும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தமிழ் செயலாளர் பாலகிருஷ்ணன் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியதும் அவர்கள் இரண்டு பேருடைய பார்வைக்கு கூறி விட்டார்கள் என் பார்வை தேவையில்லை என நீர்வளத் துறை அமைச்சர் துறை முருகன் பேட்டி
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில், மாவட்ட இளைஞரணி மற்றும் காட்பாடி தெற்கு பகுதி சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47ஆவது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பாக அழைப்பாளராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 47 கைம் பெண்களுக்கும் 47 தூய்மை பணியாளர்களுக்கும் 47 திருநங்கைகளுக்கும் நல திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக காட்பாடி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டிகளில் வென்றவர்களுக்கும் அமைச்சர் பரிசுகளை வழங்கினா£.¢
பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார்.
அதிகாரத்தில் பங்கு ஆனால் ஆட்சியில் பங்கு கிடையாது என்று ஐ பெரியசாமி கூறியதற்கு பதில் அளிக்கும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் பாலகிருஷ்ணன் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியுள்ளா£ என அதற்கு பொதுச் செயலாளராக நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்ற கேள்விக்கு, அவர்கள் இரண்டு பேருடைய பார்வைக்கு கூறி விட்டார்கள் என் பார்வை தேவையில்லை என்றார்.
அமைச்சர் பெரிய சாமியின் பதில் திருமாவளனுக்கும் சேர்த்தா என்ற கேள்விக்கு அதை பெரிய சாமியை தான் கேட்கனும் என்றார். மேலும் வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்பு வேலூரில் கோடை விழா இதுவரையில் நடைபெறாமல் இருக்கிறது இதற்கு காட்பாடி அடுத்த செஞ்சியில் அமைந்திருக்கும் மோர்தானா அணை சுற்றுலா தளமாக தரம் உயர்த்தப்பட்டு அங்கு கோடை விழா நடைபெறுமா என்ற கேள்விக்குஅதற்கான ஏற்பாடுகளை விரைவில் அறிவிக்கிறேன் என்றார்.
மழைக் காலத்தில் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கும் பிரச்சினை குறித்த கேள்விக்கு அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது விரைவில் கால்வாய்கள் சீரமைக்கப்படும் என்றார்.