ஜமா மசூதியை ஆய்வு நடத்த எதிர்ப்பு! 3 பேர் கொல்லப்பட்டனர்! 30 போலீசார் படுகாயம்!

ம.பா.கெஜராஜ்,
முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையேமோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 30 போலீஸார் காயமடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, அந்த மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற் கொள்வதற்காக சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்கு நேற்று காலை சென்றனர்.
அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மசூதியை ஆய்வு செய் அதிகாரிகள் முயன்றனர்.
ஆகவே அந்த பகுதியில்,போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மேதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது.
இதில் 3 பேர் கொல்லப்பட்டனர், 30க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.