உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க முடியாது:- உயர்நீதிமன்றம் தீர்ப்பு! புதிய வழக்கு தாக்கல்!

ம.பா.கெஜராஜ்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? நடத்தப்படாதா என்கிற கேள்வி தீவிரமாக எழுந்தது.
மக்கள் மத்தியில் தமிழ ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சூழல் மற்றும் நீதிமன்றத்தில் நடந்த வழக்குமே இந்த கேள்விக்கு காரணம்.
இந்நிலையில் தான் தமிழக நகர்புர தேர்தல் நடத்த தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கைவிரித்துள்ளது.
இது பற்றின விவரம் வருமாறு,
கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி டாக்டர் நக்கீரன் என்பவர் சென்னைருயர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். \
இதே போன்ற கோரிக்கையுடன் டாக்டர் பாண்டியராஜ் என்பவர் உள்பட மேலும் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
மேற்படி வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.கேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஐந்து மாநில சட்டசபை தேர்தலே நடைபெறும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று கூறி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தேர்தலை நடத்தலாம் என்றும் அறிவுறுத்தியதோடு வழக்கை, மறுதினமான இன்று தள்ளிவைத்தது
அந்த வகையில் இன்று மீண்டும் அந்த வழக்க்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தலை நடத்த தடையில்லை. தள்ளி வைக்க உத்தரவிட முடியாது. அப்படி உத்தரவிட்டால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணமாக அமைந்துவிடும். தமிழக தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை கட்சிகள் கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம். தொடர்பான அரசியல் சாசன விதிகளை தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், தேர்தல் அறிவித்தால் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி கடந்த செப்டம்பர் மாதம் 27-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த காலக்கெடு வருகிற 27-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் மேலும் 4 மாத அவகாசம் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பிலும் அவகாசம் கோரி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் சந்தேகம் நீடிக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் போதிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டிருக்கு.
அதே போல், ஒரே ஒரு முறை மட்டுமே ரிசர்வ் தொகுதியாக இருந்த வேலூர் மாநகராட்சியை இம்முறை பொது தொகுதியாக மாற்றியுள்ளதற்கும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.