சேர்மன் கணவருக்கு நாற்காலி? எனக்கு இல்லையா?துணைச் சேர்மன் போர்க் கொடி!

சேர்மன் கணவருக்கு நாற்காலி? எனக்கு இல்லையா?துணைச் சேர்மன் போர்க் கொடி!

  கு.அசோக்,

  ஜோலார்பேட்டை  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை தலைவர் ஸ்ரீதேவி காந்தி தனக்கு உரிய நாற்காலி வழங்காததால் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதம் - ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் - திமுக தலைவரையும் அதிகாரிகளையும் கண்டித்து துணைதலைவரின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார் பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுகவைச் சார்ந்த சத்ய சதிஷ் ஒன்றிய தலைவராகவும், ஸ்ரீதேவி காந்தி துணை தலைவராகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஜோலார்பேட்டை ஒன்றிய தலைவர் சத்யா சதிஷ் தலைமையில் 24 கவுன்சிலர்கள் அடங்கிய ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

   இதில் அந்தந்த பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவினங்கள் குறித்தும் கவுன்சிலர்களின் குறைகள்,நிறைகள் குறித்து ஒன்றிய குழு கூட்டம்  நடைபெறுவது உண்டு.

  இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் சத்யாவிற்க்கு ஒரு நாற்காலியும் அவருடைய கணவரான சதீஷ்க்கு ஒரு  நாற்காலி ஒதுக்கப்பட்டுள்ளது.

   இந்த நிலையில் துணை சேர்மன் ஸ்ரீதேவி காந்திக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் த நாற்காலி ஒதுக்கப்படவில்லை, ஆக்வே ஒன்றியக்குழு கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 மேலும் துணைத் தலைவருக்கு ஒன்றிய அலுவலகத்தில் உரிய நாற்காலி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தும் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

 மேலும் ஒன்றிய கவுன்சில் கூட்டம் முடிந்த பின்பும் ஊராட்சி ஒன்றியத்திற்கு செல்லாமல் வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

  இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் உரிய பரிசீலனை செய்த பின்பு தங்களுக்கான நாற்காலி வழங்கப்படும் என சமாதான பேச்சுயிலும் ஈடுபட்டார்.  இதன் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

 திமுக ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய தலைவரையும்  அரசு அதிகாரிகளையும் கண்டித்து துணைதலைவர் தனக்கு நாற்காலி ஒதுக்கவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.