விமான நிலைய விரிவாக்கத்துக்கு இன்னும் 10 ஏக்கர் நிலம் வேண்டும்!

விமான நிலைய விரிவாக்கத்துக்கு இன்னும் 10 ஏக்கர் நிலம் வேண்டும்!

G.K.Sekaran,

 வேலூரில் உள்ள விமான நிலையம் முழுமையாக செயல்படுவதற்கு மாநில அரசு 10.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தர வேண்டும் மத்திய தரை வழி போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே சிங் விமான நிலையத்தை ஆய்வு செய்த பின்னர் விமான நிலையத்தில் பேட்டி!

 வேலூர் மாவட்டம்,வேலூர் அப்துல்லாபுரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட விமான நிலையம் உதான் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

  மத்திய அரசு இதை இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்திற்கு உரிய வகையில் கட்டுமான பணிகளை துவங்கி முடிவுறும் தருவாயில் உள்ளது. மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி,கே சிங் இந்த விமான நிலையத்தை ஆய்வு செய்தார் அவருடன் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் வெங்கடேசன் ஜெகன்,மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

  பின்னர் விமான நிலையத்தில் அமைச்சர் வி,.கே சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் விமான நிலையத்தை ஆய்வு செய்தேன் முணையம் அமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது ஆனால் 10.7 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது ரேடார்களை அமைப்பதற்காக இடம் தேவைப்படுகிறது.

   பிற இடங்களிலிருந்து மக்கள் இங்கு கல்வி பயிலவும் மருத்துவத்திற்காகவும் வருகின்றனர் அதனை கருத்தில் கொண்டு சிறிய ரக விமான போக்குவரத்தை துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து வருபவர்களுக்கு இந்த விமான சேவை பயனுள்ளதாக இருக்கும் மேலும் விமான நிலைய மேலாரிடம் வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியாளர்களின் ஆலோசனையையும் பெற புதிய தொழில்நுட்பங்களையும் பெற அறிவுறுத்தியுள்ளோம்.

  மேலும் தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து அதனை பெற்று தர வேண்டும் அப்போது தான் ரேடார் கருவிகளை வைத்து விமான சேவையை துவங்க முடியும் என்று கூறினார்.