போதை பொருளுக்கு எதிராக பேரணி! வேலூர் ஆட்சியர் தொடங்கிவைத்தார்!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மது கள்ளச்சாராயம் கஞ்சா ஆகியவைகளுக்கு எதிராக மாணவர்கள் மாணவிகள் உறுதி மொழி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டை பூங்கா அருகிலிருந்து மது விலக்கு மற்றும் ஆயதீர்வை துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலமானது நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள் கையில் கஞ்சா கள்ளச்சாராயம் மது ஆகியவைகளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழியை ஏற்றுகொண்டனர்.
பின்னர் ஆட்சியர் சுப்பு லெட்சுமி இந்த விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்தார்.
பேரணியில் மாணவ,மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பிய படி அண்ணாசாலை வழியாக சென்று இப்பேரணியானது வேலூர் காவல் துறையின் ஆயுதப்படை மைதானத்தில் நிறைவடைந்தது
பின்னர் இதுகுறித்து பள்ளி மாணவி ஜெனனி பிரியா கூறுகையில் இன்று சர்வதேச போதை ஒழிப்பு தினம் விழிப்புணர்வு பேரணி வந்தோம். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களும் பங்கேற்றனர். கள்ளச்சாராயத்தால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அரசு மது விற்பனையை குறைக்க வேண்டும் வாரத்தில் இரண்டு நாள் மட்டும் மது விற்பனையை செய்து படிபடியாக குறைக்க வேண்டும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமென கூறினார்.