செல்போனுக்காக கூலித்தொழிலாளி வெட்டி கொலை!போதை ஆசாமிகள் வெறிச்செயல்!

கு.அசோக்,
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கரிக்கந்தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் ( 37 ) இவர். அரக்கோணம் அருகே உள்ள சாலை கிராமத்தில் சிமெண்ட் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி செண்பகம் என்ற மனைவியும், 7 மற்றும் 4 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் கரிக்ந்தாங்கல் அருகே உள்ள ஏரி கரைக்கு இயற்கை உபாதைக்காக தேவராஜ் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கஞ்சா போதை ஆசாமிகள் சிலர் தேவராஜ் வைத்திருந்த செல்போனை கேட்டுள்ளனர்.
தேவராஜ் செல்போனை தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேவராஜை சரமாரியாக வெட்டி உள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர். படுகாயம் அடைந்த அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தேவராஜ் பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். வாலிபர் படுகொலையால் கரிக்கந்தாங்கல் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரி மருத்துவமனை அருகே தேவராஜின் உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.