திருந்தவே மாட்டாங்களா!36 பஞ்சாயத்துகளுக்கு பேருந்து வசதி இல்லை!

கு.அசோக்,
அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிகட்டில் 20-க்கும் மேற்பட்டோர் தொங்கிய படியும் சில மாணவர்கள் தன்னுடைய செல் போனில் செல்பி எடுத்தும் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை உட்பட அனந்தலை,பாணாவரம், தலங்கை செங்காடு ,செங்காடு மோட்டூர் காவேரிப்பாக்கம் பனப்பாக்கம் ,ஒச்சேரி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் அரசு பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு பேருந்து அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து சென்று பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளை கூட்டநெரிசலோடும் அவர்களை நெருக்கியும் அதில் சில பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி தினந்தோறும் வருவது வழக்கமாக உள்ளது.
அதே நேரத்தில் வறுமையின் காரணமாக சில மாணவிகள் கூட்ட நெரிசல் காரணமாக அரசு பேருந்தில் ஏற முடியாமலும் பள்ளிக்கு செல்ல முடியமாலும் வீட்டுற்கே திரும்புகின்றனர்.
இதனால் அவர்களது பள்ளிப் படிப்பும் கனவும் பறிப்போய்க்கின்றது.இது மட்டுமில்லாமல் இந்த அரசு பேருந்து வாலாஜாபேட்டையில் இருக்கும் 36 பஞ்சாயத்துகளும் பேருந்து வசதி இல்லாமல் மாணவ மாணவிகள் தினந்தோறும் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் கிராமப்பகுதியில் செல்லும் ஓரு சில பேருந்துகள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கிய படியும் சில மாணவர்கள் தன்னுடைய செல்லில் செல்பி எடுத்தும் பயணம் செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க வாலாஜாவில் உள்ள 36 பஞ்சாயத்துகளில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கும் மார்கமாக செல்லும் பேருந்து வசதியை அதிகபடுத்த வேண்டும் என்றும், பேருந்து படிகட்டில் தொங்கி செல்லும் மாணவர்களை அறிவுரை வழங்கி மாற்று பேருந்தில் செல்ல ஏற்பாடு செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் கிராமத்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் காதுகளுக்கு இந்த கோரிக்கை கேட்கவேண்டுமே?