நுகர்வோர் உரிமைகள் தினம்! மாணாக்களுக்கு பரிசளித்த கலெக்டர்!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
வேலூர் மாவட்டத்தில் மண்டல அளவிலான (வேலூர், திருப்பத்தூர்,இராணிபேட்டை, திருவண்ணாமலை) தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு கவிதை போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் துறை சார்ந்த திட்ட விளக்கவுரையினை துறை சார்ந்த அலுவலர்கள் உணவு பாதுகாப்பு துறை சட்டமுறை எடையளவு துறை, மருந்து கட்டுப்பாட்டு துறை, குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு காவல் துறை, நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (வேலூர்) திரு.அ.காமராஜ், (திருப்பத்தூர்) திரு.கே.விஜயன், (திருவண்ணாமலை) திரு.கோ.கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.திருகுண ஐயப்பத்துரை, உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.செந்தில் குமார், குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு காவல் துறை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்