கோவில் இடத்தில் கெஸ்ட் அவுசா? மக்கள் ஆத்திரம்!!

கு.அசோக்,
கட்டேரி அருகே அரசு அலுவலகங்கள் கட்ட புறம்போக்கு நிலத்தை அளக்க அதிகாரிகள் முற்பட்டபோது கோயில் இடம் எனக்கூறி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கட்டேரி அம்மையப்பன் நகர் பகுதியில் சுமார் 4 ஏக்கர் அளவில் புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் 800 வருட பழமையான பிரசித்திப் பெற்ற காட்டேரி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோயிலின் முன்பே உள்ள சுமார் 4 ஏக்கர் அளவிலான புறம்போக்கு நிலத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தங்கும் மாளிகை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் சார்பில் வழிவகை செய்து தர அந்த இடத்தை அளக்க அதிகாரிகள் வந்துள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகை இட்டு நிலத்தை அளக்ககூடாது என பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர் இதனால் அப்போது சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.