பணம் நகைக்காக மூதாட்டி கொலை!

பணம் நகைக்காக மூதாட்டி கொலை!

ஜி.கே.சேகரன்,

  திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பாண்டியன் பாலிடெக்னிக், விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த தனபாக்கியம் (90) என்ற மூதாட்டி நேற்று இரவு 9.30 மணிக்கு தூங்க சென்றுள்ளார். அதனை தொடர்ந்து காலை 6.00 மணிக்கு அவர்களது உறவினர்கள் பார்த்த போது மூதாட்டி முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

   அவர் அணிந்திருந்த அரை சவரன் கம்மல், மூக்குத்தி, அரை சவரன் கொப்பு காது கம்மல், மாட்டல் அரை சவரன், கால் சவரன் தாலி, 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை மாயம் ஆகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

 தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பதை தெரியவந்தது.

  இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினார்.

  உடன் 1 டிஎஸ்பி, 3 இன்ஸ்பெக்டர்கள், 7 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் தீவிர விசாரணை நடத்திய நிலையில் சம்பவ இடத்தில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.