எண்ணும் எழுத்தும் திட்டம்... ஆன் லைன் மூலம் வேண்டாமாம்!

எண்ணும் எழுத்தும் திட்டம்... ஆன் லைன் மூலம் வேண்டாமாம்!

 ஜி.கே.சேகரன்,

 வேலூரில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் ஆர்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டது.

  வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சத்திய குமார் தலைமையில் ஆர்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடந்தது.

  இதனை தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் துவங்கி வைத்தார். ரஞ்சன் தயாளதாஸ் மற்றும் குப்புராமன் சரஸ்வதி உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர். இதில் ஆசிரியர்களின் பதவி உயர்வில் ஒன்றிய அளவிலான முன்னுரிமை என்பது 80 ஆண்டுகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது, அரசு எந்தவித ஆலோசனையும் செய்யாமல் ஆய்வும் நடத்தாமல் மாநில அளவிலான முன்னுரிமையில் தான் இனி பதவி உயர்வு செய்ய முடியும் என கூறியுள்ளதால் 90 சதவிகித ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது.

 எனவே மாநில அளவிலான முன்னுரிமையை ரத்து செய்து பழைய முறையே தொடர வேண்டும்.

 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்திற்காக 3 நபர் குழு அமைக்கபடும் என கூறியும் இதுவரையில் நடைமுறைப்படுத்தவில்லை. எண்ணும் எழுத்தும் திட்டம் ஆன் லைன் மூலம் உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை ஆண்டிற்கு 4 முறை நடத்த வேண்டும் என்பதை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையினை கல்வித்துறை அமைச்சர் ஒப்புகொண்ட படி உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியைகளும் பங்கேற்றனர்.