சித்தராமையாவை தோற்கடித்தால் 50 லட்சம் பரிசு! வாக்காளர்களுக்கா? வெற்றி பெறுபவருக்கா?

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
சித்தராமையாவை தோற்கடித்தால் தனது விசாய நிலத்தை விற்று 50 லட்சம் பரிசாக தருவதாக ஒருவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்,
கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து வீட்டு வசதிதுறை மந்திரி வி.சோமண்ணா போட்டியிடுகிறார்.
வருணா தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது. அவர்கள் வருணா தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வருணா தொகுதியில் சித்தராமையாவுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. இந்நிலையில் வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடித்தால் ரூ.50 லட்சம் தருவதாக வருணா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் அறிவித்துள்ளார்.
ஆனால் வருணா தொகுதியில் சித்தராமையா போட்டியிடுகிறார். அவர் அந்த தொகுதியில் வெற்றி பெறுவார் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் சித்தராமையாவை தோற்கடித்தால் தனது விவசாய நிலத்தை விற்று ரூ.50 லட்சம் தருவதாக கூறி பரபரப்பை ஏற்றியிருக்கிறார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கூறும் போது, இதெல்லாம் எதிர்கட்சி செய்கிற டுபாக்கூர் பிரச்சாரம்ங்க, அந்த விவசாயி சொல்வது உண்மையாக இருந்தாக்கூட 50 லட்சத்தை தொகுயில் உள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் பிரித்து கொடுப்பாரா? அல்லது வெற்றி பெற்றவருக்கு கொடுப்பாரா? என்று நக்கல் அடிக்கிறார்கள்.