முஸ்லிம் அல்லாதவர்களும் வக்பு வாரியத்தில் இடம் பெறலாம் என்ற திருத்தத்திற்கு நிதிஷ் குமார் கட்சி எதிர்ப்பு!

நரேஷ்.என்,
முஸ்லிம் அல்லாதவர்களும் இடம் பெறலாம் என்பது உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன இதற்கு பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நிதிஷ் குமார் கட்சி தெரிவித்திருக்கிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் இங்கு விட்டு சென்ற சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன்பிறகு இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில் வக்பு வாரிய சட்டத்தில் 40 திருத்தங்களுடன் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்தது. ''சச்சார் கமிட்டி பரிந்துரைப்படி கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்த மசோதாவின்படி, வக்புவாரியத்தில் முஸ்லிம் பெண்களைசேர்ப்பது, முஸ்லிம் அல்லாதவர்களும் இடம் பெறலாம் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில், மாஃபியா கும்பலின் பிடியில் இருந்து வக்பு வாரிய சொத்துகளை மீட்பதே இதன் நோக்கம்'' என்று மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு பரிந்துரை செய்தது.
பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்த சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்து வருகிறது.
மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் சிராக் பாஸ்வான், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுஆகியோர் ஏற்கெனவே கேள்விஎழுப்பினர்.
ஆனால், தே.ஜ. கூட்ட ணியில் உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அக்கட்சியின் எம்.பி. ராஜீவ் ரஞ்சன் இந்த மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் பேசினார்.
பின்னர் பிகார் முதல்வரும், ஐஜத கட்சித் தலைவருமான நிதிஷ் குமாரை, மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கான் சந்தித்து, வக்பு வாரிய சட்டத் திருத்தத்தில் உள்ள சில அம்சங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பிகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அம்மாநில மக்கள்தொகையில் 18 சதவீதம் பேர் முஸ்லிம்கள் உள்ளனர் என்கிற நிலையில்ஸ், இந்த சட்டத் திருத்தம் குறித்து முஸ்லிம்கள் அச்சம் தெரிவிப்பதாக, முதல்வருக்கு நெருக்கமான நீர்வளத் துறை அமைச்சர் விஜயகுமார் சவுத்ரியும் எடுத்துக் கூறியுள்ளார்.
ஐஜத கட்சியின் இதர தலைவர்கள், எம்எல்ஏ குலாம் கவுஸ் உள்ளிட்டோரும் இதுதொடர்பாக சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
தொடர்ந்து, ஐஜத செயல் தலைவர் சஞ்சய் ஜா, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கான்ஆகியோர், மத்திய அமைச்சர்கிரிண் ரிஜிஜுவை சந்தித்து வக்புவாரிய சட்ட திருத்தத்துக்கு மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆக நிதிஷ்குமாரின் கட்சி வக்பு சட்டதிருத்த மசோதாவை எதிர்க்க தொடங்கியிருக்கிறார்கள்.