சட்டவிரோத கல்குவாரியை அகற்ற கோரியவர் மீது பொய் வழக்கு! எஸ்.பி.யிடம் பா,ம.க.வினர் புகார்!

சட்டவிரோத கல்குவாரியை அகற்ற கோரியவர் மீது பொய் வழக்கு! எஸ்.பி.யிடம் பா,ம.க.வினர் புகார்!

ஜி.கே.சேகரன்,

 கல்குவாரியில் சட்டவிரோதமாக வெடிகளை வெடித்து பாறைகளை உடைப்பதாகவும் இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக புகார் அளித்த பாமக நிர்வாகி மீதே பொய் வழக்குபோட்டதை கண்டித்து இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பாமகவினர் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

 இராணிப்பேட்டைமாவட்டம்,இராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யனிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணை பொதுசெயலாளர்கள் இளவழகன்,சரவணன்,முரளி உள்ளிட்ட பாமகவினர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

 அதில் இராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா தாலுக்கா ரத்தினகிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் கன்னியப்பன் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார்.

 இதனால் அவர் அதிக அளவு வெடிகளை பயன்படுத்தி பாறைகளையும் மலைகளையும் உடைத்து வருகிறார்.

 இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருகிறது நீர் வளமும் பாதிக்கபடுகிறது வீடுகளும் சேதமாவதாக பாமக நிர்வாகி நாராயணபுரத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் அதிகாரிகளுக்கு மனு அளித்தார்.

 ஆனால் அதிகாரிகளும் காவல்துறையினரும் ஆதாயமடையும் நோக்கில் புகார் அளித்த பாமக நிர்வாகி சீனிவாசன் மீதே பொய் வழக்குபோட்டுள்ளனர்.

 இதனால் பாமகவினர் பாமக நிர்வாகி சீனிவாசன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற கோரியும் சுற்றுசூழலை மாசுப்படுத்தும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் மனு அளித்தனர்.